Friday, 23 August 2013

கால வேதத்தில்கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்....

முந்தைய காலத்தில் மேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதிக் காரர்களை நடத்துவதைவிட, பணக்காரர்-ஏழையை நடத்துவதைவிட, எஜமான்-அடிமையை நடத்துவதைவிட மோசமாக  பெண்களை பிறப்பு முதல் இறப்பு வரை அடிமையாகவும் கொடு மையாகவும் நடத்தினார்கள்.

சிறுவயதில் தந்தைக்கும், திருமணமான வுடன் கணவனுக்கும், வயது முதிர்ந்த நிலையில் மகனுக்கும் கட்டுப்பட்டவளாக பெண் இருக்க வேண்டும் என்பது கொடுமை அல்லவா? 
பெண்களை அடிமைத்தளையிலிருந்து விலக்கி அவர்களுக்கு சுதந்திர உணர்ச் சியும், உலக ஞானமும், கல்வி அறிவும், கூட்டு வாழ்வில் சமபொறுப்பும் ஏற்படும்படிச் செய்து விட்டோமேயானால் மனித சமூகத் தின் நன்மைக்கு செய்ய வேண்டிய காரியங் களில் பெரும்பாகத்தையும் செய்தவர்கள் ஆவோம்.


பெண்கள் வியாதியஸ்தர்களாய் ஆவ தற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற் கும், ஆயுள் குறைவதற்கும் இந்தக் கர்ப்பம் என்பதே முலகாரணமாக இருக்கின்றது.... பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று பெண்கள் கருதுவதால் சுதந்திரமும், வீரமும் இன்றி அடிமையான காரியங்களுக்கு ஆளாகிறார்கள்....

`ஆண்மையின் கொடுமையிலிருந்து மட்டுமல்லாது பெண்கள் தாய்மையின் கொடுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும். 

ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிக் காரனாய் இருப்பதனாலேயே தான் யோக்கி யமாகவும், சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாகி விடுகிறான். 

ஆணாதிக்கச் சூழலும், பழைமைவாதி களும், புராண-இதிகாச விரும்பிகளும், வேத படைப்பாளர்களும்,  பெண்களின் இருப்பை மறுத்தவர்கள்தாம். பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு அர்ப் பணிக்க வேண்டிய கடமையே என்று உறுதிப் படுத்தினர். பெண்களின் கோபத்தைக்கூட ஊடல் என்று உருக்குலைத்தார்கள். பெண் களையும், பெண்களின் உறுப்புகளையும் அழகின் அடையாளம் என்றார்கள்.

தன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால், அவளைத் தனக்கே உரிமை யாக்கிக் கொள்ளவும் அவளைத் தன்னை யன்றி வேறு புருஷனை நாடாமல் இருக்கும் படிச் செய்யவும் நிர்ப்ப்பந்தம் செய்தனர்.

ஆணுக்கும் `சாந்தம்,`மென்மை போன்ற குணஇயல்புகள் தேவையானவையே; பெண்ணுக்கும் `வீரம், `துணிச்சல் ஆகியவை இயற்கையான குணங்களே. பிள்ளை பெறுகின்ற உடலமைப்பைப் தவிர பெண்ணுக்கும், ஆணுக்குமிடையே வேறெந்த பாகுபாடும் இல்லை. பெண்களின் உயிரியல் வேறுபாடுகளை வைத்து அவர்களுக்கு பாலியல் தன்மை கற்பிக்கப்படுவது மிகவும் தவறான ஒன்றாகும்.
திருமண முறை

பெண்களை ஒரு பொருளாகக் கருதி `ஒருவருக்குக் கொடுப்பது என்கின்ற முறை ஒழிய வேண்டும் . பெண்களை நாம் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடி வாழச் செய்வது தான் கடமை. 

நமது நாட்டில் நடக்கும் திருமணமுறை பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கும் சூழ்ச்சி . புருஷன்-மனைவி சம்மந்தமே, எஜமான்-அடிமை சம்பந்தமேயொழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்புமுறை சம்பந்தமோ அல்ல! 

பெண்ணுரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென் பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் . ஓர் ஆணுக்கு என்னென்னவெல்லாம் உரிமை களாக உள்ளதோ-அத்துணையும் பெண் ணுக்கும் உண்டு. 
கற்பு

`கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது.  `கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்பட வில்லை..? `கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண்மக்களை உலகம் முன்னேற்ற மடையச் செய்ய முடியாது. 
புருஷன்-மனைவி, கற்பு, பிள்ளைப் பேறு, போலவே விதவை, விபச்சாரம் என்பனவும் கூட பெண் அடிமைத்தனத்தை உறுதி செய்யும் கருத்தாக்கங்களே. மனைவியை இழந்த ஆண் `விதவன் என்றோ விலை மகளிரிடம் செல்லும் ஆண் `விபச்சாரன் என்றோ ஏன் குறிப்பிடப்படுவதில்லை..? 

தந்திர ஏற்பாடு....

ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதின் கருத்தே பெண் களை அடிமையாக்கவும், அடக்கிப் பய முறுத்திவைக்கவும் செய்த தந்திரமே ஆகும் என்றும், காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு, அவைகளில் உலோகங்களை மாட்டிவைப்பது, மாடுகளுக்கு மூக் கணாங்கயிறு போட்டதால் அது எப்படி இழுத்துக்கொண்டு ஓடாமல், எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில், மூக்கில் ஓட்டைகளைப் போட்டு ஆணிகள் திருகி இருப்பதால், ஆண்கள் பெண்களைப் பார்த்து கை ஓங்கி னால் எதிர்த்து அடிக்க வராமல் இருக்க, எங்கே காது போய் விடுகிறதோ, மூக் கறுந்து போய் விடுகிறதோ என்று தலை குனிந்து முதுகைக் காட்டத் தயாராய் இருப்பதற்காகவே அது உதவுகிறது என் றும் பெண்களின் அணிமணிகள் ஆசை யையும், அதனை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் ஆண்களின் மனோபாவமும் கண்டிக்கத்தக்கது.

நகை என்பது பெண்உரிமைக்குப் பூட்டப்பட்டிருக்கின்ற பொன்விலங்கு என்பதைப் பெண்இனம் மறக்கக் கூடாது. 

பெண்களின் ஆசையிலும், வாழ்க்கை லட்சியத்திலும் தலைகீழான புரட்சி ஏற்பட வேண்டும். ஆண்கள் செய் கின்ற எல்லா வேலைகளுக்கும் பெண்கள் தங்களைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆண்களைப் போன்று துணிவாக நடந்துகொள்ள வேண்டும். பெண்கள் தனியாக வாழமுடியும், எதனை யும் சாதிக்கமுடியும் என்கின்ற நிலைக்கு வரவேண்டும். சுதந்திரமாக, கவலையற்று வாழ, தொல்லையற்று வாழ அறிவைக் கொண்டு சிந்தித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.  

கால வேதத்தில் இவை எல்லாம் அனைவரும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.எனவே ஒவ்வொரு பெண்ணையும் சக மனுஷியாக பார்க்க வேண்டும்..

1 comment:

  1. இம்புட்டு நல்ல விசயங்களா சொல்லி இருக்கீங்க இதுவரை எவரும் கருத்து சொல்லவில்லையே....

    அருமை
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete